தரணி போற்றும் ஆரணியே! மன்சூர் அலிகான் போட்டியிடும் மக்களவை தொகுதி அறிவிப்பு

வரும் மக்களவை தேர்தலில் ஆரணி தொகுதி வேட்பாளராக களமிறங்கப் போவதாக மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆரணியில் போட்டி
நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதி வேட்பாளராக களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி!

அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே” என்று தெரிவித்துளார்.

இவர் அண்மையில் தனது தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மாற்றினார்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான் வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *