ஏங்கிய ஒரு தாயின் கையில் மகனின் உயிரற்ற உடல்… ராபர்ட் பயசின் திறந்த மடல்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்ட 6 பேர்களில் ஒருவரான ராபர்ட் பயஸ் சிறப்பு முகாமில் இருந்து திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

சிறப்பு முகாமில் தமது அனுபவம்
32 வருட நீண்ட சிறைக் கொட்டடிக்கு பின்னர் கடந்த 2022 நவம்பர் 11ம் திகதி உச்சநீதிமன்றம் விடுதலை செய்த 6 பேர்களில் ஒருவரான சாந்தன் என்பவர் மரணமடைந்ததை அடுத்து, சிறப்பு முகாமில் தமது அனுபவத்தை உலகத் தமிழர்களுக்கு பகிர்ந்து கொண்டுள்ளார் அந்த 6 பேர்களில் இன்னொருவரான ராபர்ட் பயஸ்.

இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரை இந்திய வெளிவிவகாரத்துறை நாட்டைவிட்டு வெளியே அனுப்பும் வரையில், சிறப்பு முகாமில் அடைத்து வைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையிலேயே சாந்தன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். தற்போது சிறப்பு முகாமில் இந்திய வெளிவிவகாரத்துறையின் நடவடிக்கைக்கு காத்திருக்கும் ராபர்ட் பயஸ் தமது சிறப்பு முகாம் அனுபவம் தொடர்பில் உலகத் தமிழர்கள் அறிய கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *