மதுபோதையில் சிஐஎஸ்எஃப் வீரர்களிடம் தகராறில் ஈடுபட்ட பிரபல பாடகர்..!

பிரபல நாட்டுப்புற பாடகர் வேல்முருகன். இவர் ‘சுப்பிரமணியபுரம்’, ‘ஆடுகளம்’, ‘நாடோடிகள்’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் பாடல்கள் பாடி புகழ் பெற்றவர். மேலும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் திருச்சி செல்ல வேண்டி சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.‌

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் அவரை சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பாடகர் வேல்முருகன் மதுபோதையில் இருந்தது தெரியவந்ததை அடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் சம்மந்தப்பட்ட தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வேல்முருகன் மதுபோதையில் இருந்ததால் அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க மறுக்கப்பட்டதாக தெரிகிறது.‌

இதனால் ஆத்திரமடைந்த பாடகர் வேல்முருகன் பாதுகாப்பு படை வீரர்களிடம் தகராறில் ஈடுப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பாடகர் வேல்முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பாடகர் வேல்முருகன் மன்னிப்பு கேட்டதை அடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அவரை வேறு விமானத்தில் திருச்சிக்கு அனுப்பி வைத்தனர். விமான நிலையத்தில் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் மதுபோதையில் பாதுகாப்பு படை வீரர்களிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *