அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்..!

மதுரை, சென்னையில் நேற்று ஒரே நாளில் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், குஜராத் கடல் எல்லையில் அண்மையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலானபோதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் திமுக அயலக அணி நிர்வாகி ஜாபர் சாதிக்தலைமறைவாகி உள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்தாடுவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அக்கட்சி சார்பில் திமுக அரசைக் கண்டித்து இன்று (மார்ச் 4) கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக சார்பில் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”தமிழ்நாட்டில் அதிகரித்து வரும்போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத்தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் இன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இன்றைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்று விடப்போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளிபோதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.

பெற்றோர்களே, இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளைநாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக இருங்கள்! மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே– உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும் ” என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *