உங்கள் முதலாளியிடம் மறந்தும் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்!

– வேலை சம்பந்தமான விஷயங்களில், அது என் வேலை இல்லை அல்லது எனக்கு சலிப்பாக இருக்கிறது போன்ற வார்த்தைகளை முதலாளி அல்லது உங்கள் மேனேஜரிடம் கூற கூடாது. ஏனெனில் இந்த வார்த்தைகள் நீங்கள் அந்த அலுவலகத்தில் இருந்து விலகல் மற்றும் வேளையில் சலிப்பு தன்மை போன்றவற்றை பரிந்துரைக்கின்றன, இது உங்கள் மீதுள்ள நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும்.

– உங்களுக்கு அலுவலத்தில் கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டால் அது என் வேலை இல்லை என்று கூற கூடாது. அதற்குப் பதிலாக வேறு சில வார்த்தைகளில் அதனை புரிய வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு அதிக வேலை இருப்பதை உணர்ந்தால், அதனை முதலாளியிடம் எடுத்து கூறுங்கள் அல்லது இதற்கு கூடுதல் பணியாள் வேண்டும் என்று கேளுங்கள்.

– எந்த வேலை கொடுத்தாலும் எனக்கு தெரியாது என்று ஒருபோதும் சொல்ல கூடாது. இது பணியிடத்தில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த கூடும். உங்களுக்கு வேலை தெரியாது என்ற மனநிலையையும் முதலாலிக்கு ஏற்படுத்த கூடும். உங்களுக்கு புதிதாக கொடுக்கப்படும் வேலையை நன்கு புரிந்து கொள்வது, அதை தகவலைக் கண்டறிய முன்வருவது அல்லது அந்த விசயத்தை பற்றி தெரிந்து கொண்டு விளக்கம் கொடுப்பது நல்லது.

– ஒரு வேலை சவாலானதாக இருந்தாலும் அதனை முடிக்க மாற்று வழிகளை தேடாமல் நேரடியாக என்னால் செய்ய முடியாது என்று சொல்ல கூடாது. எந்தவொரு வேலையையும் தொழில் ரீதியாக விவாதிப்பது மற்றும் தேவைப்பட்டால் மாற்று தீர்வுகள் அல்லது சமரசங்களை முன்மொழிவது நல்லது.

– உங்களின் செயல்கள் முதலிக்கு உங்கள் வேலையில் ஈடுபாடு அல்லது ஆர்வமின்மை இல்லாமல் இருப்பதாக தெரிய கூடாது. அதற்கு பதிலாக, நீங்கள் அந்த வேலையை செய்ய முடியவில்லை என்றால் முடிந்தவரை அதில் நீங்கள் முயற்சி செய்தீர்கள் என்பதை முதலாளிக்கு தெரியப்படுத்துங்கள்.

– அதே போல முன் அனுமதி அல்லது சரியான காரணம் இல்லாமல், திடீரென வேலையில் இருந்து கிளம்ப கூடாது. இது உங்கள் மீது பொறுப்பற்ற தன்மையை முதலாளிக்கு ஏற்படுத்தும்.

– இந்த வேலையை என்னால் செய்ய முடியாது என்று ஒருபோதும் கூற கூடாது. இது உங்கள் வேலைக்கே இடையூறை ஏற்படுத்தலாம். சக ஊழியருடன் உங்களுக்கு சிக்கல்கள் இருந்தால், பிரச்சினையை விவேகமாகவும் தொழில் ரீதியாகவும் முடிப்பது நல்லது, மோதல்களை அதிகரிப்பதை விட தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

– பணிச்சுமையை திறம்பட நிர்வகிப்பது முக்கியமான விஷயம் என்றாலும், பிஸியாக இருப்பதை ஒரு சாக்காகப் எப்போதும் சொல்லாதீர்கள். உங்கள் தற்போதைய வேலையை விட்டு வெளியேற நீங்கள் முடிவு செய்கிறீர்கள் என்றால் அதனை உங்கள் முதலாளிக்கு தெரியும்படி செய்வது நல்லதல்ல.

– முதலாளியிடம் எனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று நேரடியாக கேட்காமல் உங்களின் திறன்கள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம். முதலாளிக்கு உங்களின் முக்கியத்துவம் தெரிந்தால் தானாகவே உங்களின் சம்பளம் உயரும்.

– உங்கள் முதலாளியுடன் அவமரியாதை அல்லது அதிருப்தியை வெளிப்படுத்துவது உங்கள் வேளையில் உங்களுக்கு கேட்ட பெயரை ஏற்படுத்தும். உங்கள் மேலாளர் அல்லது முதலாளியின் செயல்களில் உங்களுக்கு வருத்தம் இருந்தால் ஒருவருக்கொருவர் பேசி சரி செய்வது நல்லது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *