மக்களவை தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.. தபால் வாக்கு தொடர்பாக முக்கிய அறிவுரை

தபால் வாக்குகளுக்கான பணிகளும் தயார் நிலையில் உள்ளன. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்ய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றிக்கையும் ஏற்கனவே அனுப்பியுள்ளது.

தபால் வாக்கு சீட்டுகளை தயார் செய்யும் பணியை கண்காணிக்க தனியாக ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப் பட்டவுடன் உடனடியாக தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள அரசு அச்சகங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணிகள் தொடர்பான விவரங்களை கண்காணிக்க வேட்பாளர்கள் தங்களின் ஏஜெண்டுகளை நியமிக்கலாம் என்றும், ஒரு பண்டலுக்கு 50 வாக்கு சீட்டுகள் என்ற அடிப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களை இட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை அச்சடிக்கும் பணியில் போதுமான பணியாளர்கள் போதுமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதை மாவட்ட தேர்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தபால் வாக்கு சீட்டுகளில் வேட்பாளரின் பெயர், சின்னம், வரிசை எண் ஆகியவை சரியாக அச்சடிக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், தபால் வாக்கு சீட்டுகள் அச்சடித்த பிறகு அவற்றை அந்த அச்சகத்தின் பொறுப்பாளர் உதவி தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் தபால் வாக்குச் சீட்டுகளை அச்சகத்தில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட வேண்டும். வாக்குச் சீட்டுகள் அனைத்தும் ஒரு இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டு, தனி அறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *