ரிஷி சுனக்கை வெளியேற்றி பெண் ஒருவரை பிரதமராக்க திட்டம்: எம்.பி.க்கள் குழு ரகசிய ஆலோசனை

ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் பலம்பொருந்திய எம்.பி.க்கள் குழு ஒன்று பிரதமர் ரிஷி சுனக்கை வெளியேற்ற ரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மிக விரைவில் அறிவிக்க
அத்துடன் Penny Mordaunt என்பவரை நாட்டின் பிரதமராக பொறுப்பளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல ஆண்டுகளில் பிரித்தானியர்கள் நான்காவது கன்சர்வேடிவ் கட்சி பிரதமரைப் பெற இருப்பதாக கூறுகின்றனர்.

மிக விரைவிலேயே கன்சர்வேடிவ் கட்சி தலைவருக்கான தேர்தலையும் முன்னெடுக்கும் திட்டத்தை இந்த எம்.பி.க்கள் குழு வகுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்சி தலைவர் மற்றும் பிரதமரை மிக விரைவில் அறிவிக்கவும் அவர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், மே மாதம் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தே ரிஷி சுனக்கை நீக்குவது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் நெருக்கடியில், ரிஷி சுனக் மிகவும் பலவீனமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

ரிஷியா அல்லது பென்னியா
மொத்த கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.க்களும் மிக விரைவில் தலைவரை தெரிவு செய்யும் கூட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். மட்டுமின்றி, கட்சியில் தற்போது Penny Mordaunt-க்கு ஆதரவும் வலுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவிக்கையில், ரிஷியா அல்லது பென்னியா என்ற கேள்விக்கு, பென்னி என்பதே பதில் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

53 கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் ரிஷி சுனக்குக்கு எதிராக நம்பிக்கை இல்லா கடிதம் அளித்தால், பிரதமர் பொறுப்பில் இருந்து கட்டாயம் ரிஷி சுனக் விலக நேரும் என்றும் கூறுகின்றனர். ஆனால் இந்த ரகசிய கூட்டம் மற்றும் அரசியல் நகர்வுகள் தொடர்பில் பென்னி தரப்பில் கருத்தேதும் கூறவில்லை என்றே கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *