மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே புது ரயில் சேவை..!

தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புது ரயில் சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது வெளியாகி உள்ள அட்டவணைப்படி இந்த ரயில் சேவை (ரயில் எண் 16766/16765) வியாழன் முதல் ஞாயிறு வரை இடம்பெறும்.இந்த ரயில் ஆனது தூத்துக்குடியில் இருந்து இரவு 10:50 க்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 1:15க்கும் கோவைக்கு காலை 6:18 க்கும் மேட்டுப்பாளையத்திற்கு காலை 7:15க்கும் வந்து சேரும்.பின்னர் இரவு 8 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு கோவைக்கு இரவு 8:40க்கும் மதுரைக்கு இரவு 1: 15க்கும் தூத்துக்குடிக்கு அதிகாலை 4:20க்கும் இந்த ரயில் வந்து சேரும்.

அதேபோல மங்களூரு முதல் ராமேஸ்வரம் வரையிலான மற்றொரு புது ரயில் சேவையும் அறிமுகமாகிறது.

இந்த ரயில் சேவையானது ( ரயில் எண் 16622/16621) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும்.இந்த ரயில் மங்களூரில் இருந்து சனி இரவு 7:30 க்கு புறப்பட்டு, இரவு 2:10 க்கு பாலக்காடு, ஞாயிறு அதிகாலை 4:05 மணிக்கு பொள்ளாச்சி, மற்றும் காலை 11:45 க்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.பின்னர் மதியம் 2 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9:35 க்கு பொள்ளாச்சி 11:20 க்கு பாலக்காடு மற்றும் திங்கள் காலை 5:50க்கு மங்களூரு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி திருநெல்வேலி இடையே இயங்கி வந்த சிறப்பு ரயில் சேவையானது நிறுத்தப்படுவதாகவும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த இரண்டு புதிய ரயில் சேவைகளை விரைவில் அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *