பாம்பு திடீரென உங்கள் அறைக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

இந்த பிரபஞ்சத்தில் பல உயிரினங்கள் இருந்தாலும், மனிதன் கண்ட உடனே படையே நடுங்கும் அளவுக்கான பயப்படுவது பாம்பு தான். நாய், பூனை வீட்டில் வளரும். சிங்கம் புலி யானை எல்லாம் காட்டில் வளரும். ஆனால் பாம்பு தான் எல்லா இடத்திலும் இருக்ககூடிய உயிரினம். விஷத்தன்மை இருப்பதால், பாம்பு கடித்த சில நொடிகளில் அல்லது மணி நேரங்களில் உயிரிழக்கக்கூடும் என்பதால் தான் படை நடுங்கும் அளவுக்கான பயம் மனிதர்களிடத்தில் இருக்கிறது.

பாம்பு நுழைவதற்கு சிறிய அளவிலான ஓட்டை கூட போதும். இப்போதெல்லாம் கழிவறை பைப்புகள் வழியே பாம்புகள் நுழைந்து வந்துவிடுவதும் வாடிக்கையாகி வருகிறது. கழிப்பறை, காலணிகளுக்குள் அல்லது சோஃபாக்களுக்கு அடியில் எல்லாம் ஒளிந்து கொள்ளும். இருசக்கர வாகனங்களில் கூட பாம்பு நுழைந்து படுத்துக் கொள்ளும். இப்படியான இடங்களில் பாம்பை பார்த்துவிட்டால் உடனே மக்கள் உட்சபட்ச பீதி அடையத் தொடங்குகிறார்கள் அல்லது ஓடத் தொடங்கிவிடுவார்கள். அப்போது தான் என்ன செய்வதென தெரியாமல் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

யாராவது ஒரு பாம்பை சந்திக்கும் போதெல்லாம், சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான சிறந்த வழி, பாம்பு இருக்கும் திசையில் திடீர் அசைவுகளை செய்யாமல் இருப்பதே. அதாவது பாம்பு வரும் திசையில் ஓட முயலக்கூடாது. பாம்பை தாக்க முயலக்கூடாது. மாறாக, அவர்கள் அதை மெதுவாக விடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இபாம்புகளின் குணங்களில் ஒன்று, அவை மனிதர்களுக்கு அருகில் வர விரும்பாது. யாராவது அவைகளை தொந்தரவு செய்யாவிட்டால், பாம்புகள் தங்களுக்கான வழியைப் பின்பற்றி எளிதாக வெளியேறிவிடும். பாம்புகள் ஆபத்தை உணரும்போது அல்லது தாக்கப்படும்போது மட்டுமே எதிர்த்து தாக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம், பாம்பு இருக்கும் இடத்தில் அமைதியைப் பேணுவது நல்ல அணுகுமுறை. ஒரு பாம்பு ஒரு அறைக்குள் நுழைந்தால், மக்கள் அவரை அமைதிப்படுத்த முயற்சிக்க வேண்டும் மற்றும் திடுக்கிட வைக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. அதைக் கண்காணித்து பாம்பு பீதியடைவதைத் தடுப்பது முக்கியம். மேலும், யாரும் தாங்களாகவே பாம்புகளைப் பிடிக்க முயற்சிக்கக் கூடாது. பாம்புகளைக் கையாள்வதில் அனுபவம் இருக்கும் தொழில்முறை பாம்பு பிடிப்பாளரையே அணுக வேண்டும்.

அதிக ஒலிகள் அல்லது உரத்த சத்தங்கள் சில சமயங்களில் பாம்பை ஓர் இடத்தில் இருந்து வெளியேற்ற உதவும். பாம்புகளுக்கு காதுகள் இல்லை ஆனால் அவை அதிர்வுகளை மிகவும் உணர்திறன் கொண்டவை. உரத்த சத்தம் பாம்பை அமைதியான இடத்திற்கு ஓடச் செய்யும். ஆனால் இதைச் செய்யும்போது கவனமாக இருப்பது மிகவும் முக்கியம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *