RCB, Virat Kohli: கிங் என்று கூப்பிட்டால் கூச்சமாக இருக்கும் – விராட் என்று அழைக்க வேண்டும் – விராட் கோலி!

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனுக்கான கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே விற்று தீர்ந்து விட்டன. சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இதுவரையில் எந்த மாற்று வீரரும் அறிவிக்கப்படவில்லை. மேலும், முஷ்தாபிகுர் ரஹ்மானும் காயம் அடைந்த நிலையில், அதிலிருந்து மீண்டு சென்னை வந்துள்ளார். மேலும், மதீஷா பதிரனா வருகை குறித்து இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.

இதே போன்று ஆர்சிபி அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்று இருந்த அணியின் பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று அணி நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது. அதே போன்று, ஆர்சிபியின் லோகோவும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஆர்சிபி அணியின் ஜெர்சியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீசன் முதல் ஆர்சிபி புதிய ஜெர்சியுடன் விளையாட இருக்கிறது. இதில், நீலம் மற்றும் சிவப்பு கலந்த வண்ணங்கள் கொண்ட ஜெர்சியுடன் ஆர்சிபி விளையாட இருக்கிறது.

இந்த நிலையில் தான் ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்ச்சியின் போது பேசிய விராட் கோலி கூறியிருப்பதாவது: சென்னைக்கு விரைவில் புறப்பட வேண்டிய தேவை உள்ளது. எங்களுக்கான விமானமும் தயாராக உள்ளது. ஆர்சிபி ரசிகர்கள் என்னை கிங் என்று அழைக்க வேண்டும். விராட் என்று அழைத்தாலே போதுமானது.

கிங் என்று அழைப்பதை நிறுத்த வேண்டும். அப்படி அழைக்கும் போது எனக்கே ஒரு மாதிரியாக கூச்சமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தான் நேற்றைய நிகழ்ச்சி முடிந்த நிலையில் சென்னை வந்த ஆர்சிபி வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் வரும் 22 ஆம் தேதி மோத உள்ள நிலையில், ஆர்சிபி வீரர்கள் இன்று சென்னை வந்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *