தைவானைச் சுற்றி 24 மணிநேரத்தில் 32 போர் விமானங்கள்! சீனா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

24 மணிநேரத்தில் 32 சீனப் போர் விமானங்கள் தங்கள் நாட்டின் மீது கண்டறிந்ததாக தைவான் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

உரிமை கோருவதால் பதட்டங்கள்
சீனா தங்கள் பிரதேசத்தின் ஒரு பகுதி என்று உரிமை கோருவதால், தைவானுக்கு இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் தைவானைச் சுற்றி சீனாவின் 11 கடற்படைக் கப்பல்கள் கண்டறியப்பட்டதாக தைவான் கூறியது.

அதேபோல் சந்திர புத்தாண்டு விடுமுறையின்போது தொடர்ச்சியாக 2 நாட்களில் 8 சீன பலூன்களை தைவான் கண்டறிந்தது.

32 சீன இராணுவ விமானங்கள்
இந்த நிலையில் தைவானைச் சுற்றி 5 கடற்படைக் கப்பல்கள் இயங்குவதை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

அத்துடன் 24 மணிநேரத்தில் 32 சீன இராணுவ விமானங்கள் தீவைச் சுற்றி கண்டறியப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சனவரி பிற்பகுதியிலும், பிப்ரவரி தொடக்கத்திலும் இரண்டு 24 மணி நேர காலப்பகுதிகளில் தீவைச் சுற்றி 33 சீனப் போர் விமானங்களைக் கண்டறிந்தது, இந்த ஆண்டின் மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

சீனா சமீபத்திய ஆண்டுகளில் இராணுவ அழுத்தத்தை அதிகரித்துள்ளது. மேலும், தீவைச் சுற்றி போர் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *