வரும் மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி..!

நடப்பு நிதியாண்டின் 2023-24 கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், அரசு வணிகத்தைக் கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கிகளுக்கும் தங்கள் கிளைகளை திறந்து வைக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) கோரிக்கை விடுத்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதத்தில் அதிக விடுமுறை தினங்கள் வந்துள்ளன.

இந்நிலையில், மார்ச் 31-ம் தேதி விடுமுறையை தினத்தை ரத்து செய்து, அன்று வங்கிகள் செயல்பட வேண்டும் என அனைத்து வங்கி மற்றும் நிதி பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மார்ச் 31,ஞாயிற்றுக்கிழமை. 2023-24 நிதியாண்டு தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கில் வைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசாங்க ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகளைக் கையாளும் அனைத்து கிளைகளும் இந்த நாளில் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், 2023 நிதியாண்டில் ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அனைத்து அரசாங்க பரிவர்த்தனைகளுக்கும் கணக்கு காட்டுவதற்காக, மார்ச் 31, 2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரிவர்த்தனைகளுக்கு அரசாங்க ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகளைக் கையாளும் வங்கிகளின் அனைத்து கிளைகளையும் திறக்குமாறு இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மார்ச் 31, 2024 அன்று அரசு வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து கிளைகளையும் திறந்து வைக்குமாறு ஏஜென்சி வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிவிலக்கான நாளில் வங்கிச் சேவைகள் கிடைப்பதை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான 2023-24 அன்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *