பாரம்பரிய சுவையுடன் வத்தக் குழம்பு… இப்படி செஞ்சா எல்லாருக்கும் பிடிக்கும்!

பொதுவாகவே அனைவருக்கும் வெவ்வேறு சுவைகளில் உணவுகளை சாப்பிடுவது பிடித்தமாக விடயம் தான்.

மற்ற உயிர்களால் செய்ய முடியாத விடயங்களில் ஒன்று தான் சமையல். மனிதர்களாக பிறந்தால் பல சுவைகளில் சாப்பிட முடிகின்றமையே ஒரு அலாதி இன்பம் என்று தான் கூற வேண்டும்.

இந்த வகையில் திருமணவீடுகளில் சமைப்பது போல் சுவையான வத்தக்குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சுண்டக்காய் – 1 கப்

வெந்தயம் – 2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி

துவரம் பருப்பு – 2 தே.கரண்டி

மல்லி – 2 தே.கரண்டி

மிளகு – 1 தே.கரண்டி

பெருங்காயத் தூள் – 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி

வரமிளகாய் – 4 புளி– 75 கிராம்

சின்ன வெங்காயம் – 10

வெல்லம்– 1 தே.கரண்டி

அரிசி – 1 தே.கரண்டி

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 1 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி

கடலைப் பருப்பு – 2 தே.கரண்டி

செய்முறை

முதலில் வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

அதே கடாய்யில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

மற்றொரு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகம் வரையில் நன்றாக வதக்க வேண்டும்.

பின் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

பின்னர் அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும்.

5 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிட்டு இறக்கினால் மணமணக்கும் வத்தக்குழம்பு தயார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *