பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது! திமுக – அதிமுகவுக்கு தான் போட்டி! கனிமொழி.!

தூத்துக்குடி தொகுதியில் திமுக நிச்சயமாக வெற்றி பெறும். அதுபோல தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வந்த திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி திமுக வேட்பாளருமான கனிமொழி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தூத்துக்குடி தொகுதியில் திமுக நிச்சயமாக வெற்றி பெறும். அதுபோல தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 12 தொகுதிகளுக்கு பிரச்சாரத்திற்கு செல்வேன். தமிழகத்தில் போட்டி என்றால் திமுக-அதிமுக இடையே தான். பாஜகவை மக்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள். சவால் விடட்டும். ஒட்டு எண்ணும் போது பார்த்து கொள்ளலாம். பாஜக ஆளும் மாநிலங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை பார்த்து கொண்டு இருக்கிறோம். தமிழ்நாடு முன்னேறிய மாநிலங்களில் முக்கியமானது.

கல்வி, தொழில், போன்று அனைத்து துறைகளிலும் முன்னேறி இருப்பதற்கு திராவிட இயக்கத்தின் கருத்துக்களை உள்வாங்கிய ஆட்சி நடப்பதால் தான். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. முதலில் நாட்டை காப்பாற்ற வேண்டும் என கனிமொழி கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *