ஏப்ரல் 1 முதல் கார் விலையை உயர்த்தும் KIA..!!

நாட்டின் மிகப் பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான கியா இந்தியா தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. கியாவின் செல்டோஸ், சோனட், காரென்ஸ் ஆகியவற்றின் விலை 2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்கின்றது.

சப்ளை செயினில் பொருட்கள் செலவு அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வை கியா அமல்படுத்துகிறது. இந்த ஆண்டில் அந்த நிறுவனம் அறிவித்துள்ள முதல் விலையேற்றம் இது.

கியா இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தேசியத் தலைவர் ஹர்தீப் சிங் ப்ரார் இதுபற்றி கூறுகையில், கியாவில், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்புகளை வழங்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.

எப்படி இருந்தாலும் பொருட்களின் விலையில் தொடர்ச்சியான அதிகரிப்பு, பாதகமான மாற்று விகிதம் மற்றும் அதிகரித்து வரும் உள்ளீடு செலவு ஆகியவற்றின் காரணமாக, விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கியா நிறுவனம் இந்த அதிகரிப்பின் கணிசமான பகுதியை உள்வாங்கிக் கொள்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான கியா கார்களை அதிக செலவின்றி தொடர்ந்து வாங்கலாம்.

கியா இந்திய மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இருந்து வருகிறது. இன்றுவரை சுமார் 1.16 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அதன் வரிசையில், செல்டோஸ் 613,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து 395,000 யூனிட்டுகளுக்கு மேல் சோனெட் மற்றும் சுமார் 159,000 யூனிட்களுடன் கேரன்ஸ்.

முந்தைய மாதத்தில், கியா இந்தியா அதன் வரம்பில் 20,200 யூனிட்களின் மொத்த விற்பனை எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. அதிகபட்சமாக சோனட் 9,102 யூனிட்கள் விற்பனையானது. செல்டோஸ் 6,265 யூனிட்கள் மற்றும் கேரன்ஸ் 4,832 யூனிட்களுடன் பின்தங்கியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *