ரஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் – தமிழக அரசு உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கை செல்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

32 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வந்தவர்களை தமிழ்நாடு அரசு விடுவித்தது.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை பெற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள்.

ஆனால் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சியில் உள்ள இலங்கை தமிழருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

இலங்கை செல்வதற்கான சட்ட சிக்கல் ஏற்பட்டமையால் அவர்களால் இலங்கைக்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில் தமிழக அரசு சாதகமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவு
கைது செய்யப்பட்ட முருகன் தனக்கு அடையாள அட்டை வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “லண்டனில் உள்ள எனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க போகிறேன். அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் ஆகும். எனவே தனக்கு உரிய அடையாள அட்டையை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குநரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அந்த விண்ணப்பத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” என முருகன் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், குமரேஷ் பாபு என்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி, “முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் கடவுசீட்டு வழங்கவிட்டது. மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒருவாரத்தில் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவர்.” என கூறியுள்ளார்.

மேலும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு செல்வார்கள் என தெரியவந்துள்ளது.

இலங்கை தூதரகத்தால் கடவுசீட்டு வழங்கப்பட்டுள்ளமையால், அடையாள அட்டை தேவையில்லை எனக்கூறி முருகனின் மனுவை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *