புரோ கபடி லீக் 2023 : யு மும்பா, தபாங் டெல்லி அணிகள் வெற்றி

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஷஹீத் விஜய் சிங் பதிக் விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – யு மும்பா அணிகள் மோதியது.

10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

இந்த தொடரில், உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஷஹீத் விஜய் சிங் பதிக் விளையாட்டு அரங்கத்தில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – யு மும்பா அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 52-34 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் யு மும்பா அணி 7 போட்டிகளில் 5 வெற்றி 2 தோல்வியுடன் 26 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. தோல்வியடைந்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதியது. பரபரப்பான இந்த போட்டியில், 35-25 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தபாங் டெல்லி அணி 8 போட்டிகளில் 4 வெற்றி 3 தோல்வி ஒரு டிராவுடன் 25 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. தோல்லியடைந்த உ.பி.யோத்தாஸ் அணி 20 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *