பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவி உடல் … கரூரில் பரபரப்பு… !

தாயாரம்மாள். தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இளைய மகள் சுபா ஹரிணி (19), கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் தகனம் செய்வதற்காக உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர் பெற்றோர். தகவலறிந்து வந்த லாலாப்பேட்டை போலீசார், சுடுகாட்டில் எரிந்த உடலை தண்ணீர் ஊற்றி, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினர் மறைத்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *