அ.தி.மு.க. சார்பில் குழுக்கள் அமைப்பு : தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கான குழுவில் பொள்ளாச்சி வி. ஜெயராமன்..!

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான தேர்தல் அட்டவணையை பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அ.தி.மு.க. சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவில், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி. சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பா. பென்ஜமின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கான குழுவில் இரா. விசுவநாதன், சி.பொன்னையன், பொள்ளாச்சி வி. ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்வதற்கான குழுவில், டாக்டர் மு.தம்பிதுரை, கே.ஏ.செங்கோட்டையன், என்.தளவாய்சுந்தரம், செல்லூர் கே.ராஜூ, ப.தனபால், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், எஸ்.கோகுலஇந்திரா, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தல் சம்பந்தமான விளம்பர பணிகளை மேற்கொள்வதற்கான குழுவில், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் சி.ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் பி.வேணு கோபால், டாக்டர் வி.பி.பி.பரமசிவம், ஐ.எஸ்.இன்பதுரை, எஸ்.அப்துல்ரஹீம், வி.வி.ஆர்.ராஜ்சத்யன், வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு கட்சியின் உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *