40 ரூபாய்க்காக ஏற்பட்ட தகராறில் பறிபோன உயிர்

இந்திய மாநிலம் ஒடிசாவில் ரூ.40 பணத்திற்காக நடந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரூ.40 சண்டை
ஒடிசா மாநிலம் பரல்பொகாரி கிராமத்தில் மளிகை கடை வைத்திருந்தவர் பிஜய் பண்டா. இவரது கடைக்கு வந்த நபர் ஒருவர் ரூ.180 மதிப்பிலான பொருட்களை வாங்கியுள்ளார்.

ஆனால், ரூ.140 தான் பணம் கொடுத்துள்ளார். மீதம் தரவேண்டிய பணத்தை பின்னர் தருவதாக குறித்த நபர் கூறியுள்ளார்.

எனினும் பண்டா விடாப்பிடியாக பணத்தை உடனடியாக தருமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது.

மயங்கி விழுந்து மரணம்
அப்போது குறித்த நபர் பண்டாவை தாக்க, அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். பண்டா மயங்கி கிடப்பதை கண்ட கிராமவாசிகள், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாதி வழியிலேயே பண்டா உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பண்டாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். மேலும் பண்டாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் முடிவு வெளியான பின்னரே மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *