வைரலாகும் கோவையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்..!

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்த அதே நாளில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சமூகம் நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று அக்கட்சியின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் இந்த சட்டம் குறித்து சுவரொட்டிகள் கோவையில் ஒட்டப்பட்டு இருக்கிறது.

“பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் இயற்றத்தக்கது அல்ல அதை திரும்ப பெற வேண்டும்,” என்ற வாசகம் கொண்ட பிரமாண்ட சுவரொட்டியை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவையில் ஒட்டியுள்ளனர். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *