ஆப்கானிஸ்தானில் திடீரென பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தானிம் மசார் இ சரீஃப் என்ற நகரத்தில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கமானது 18.02.2024 மாலை 4.50 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மதிப்பு ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம்
நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக, இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *