சபரிமலையில் நடிகர் திலீப் மற்றும் விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம்..!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். மண்டல பூஜை முடிவடைந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ம்தேதி திறக்கப்பட்டது.

ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பதிவு செய்த பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடை திறக்கப்பட்ட நாள் முதல் பக்தர்களின் கூட்டம் சபரிமலையில் அலைமோதியதால் தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டம் ஓரளவுக்கு குறைந்தது.

இந்த நிலையில் மகரஜோதி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் நேற்று முன்தினம் முதலே சபரிமலையில் குவியத் தொடங்கி விட்டனர். இதனால் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

மகரஜோதிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்க பந்தளம் அரண்மனையில் இருந்து கடந்த 13ஆம் தேதி திரு ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகள் எடுத்து வரப்பட்டது. நேற்று காலை நிலக்கலுக்கு கொண்டுவரப்பட்ட திரு ஆபரண பெட்டிகள் அங்கிருந்து பெரியானை வட்டம் வழியாக நீலிமலை சரங்கொத்தியை வந்து அடைந்தது திரு ஆபரண பெட்டியை பெற்றுக்கொண்ட தேவசம் கூட அதிகாரிகள் அங்கிருந்து எடுத்து வந்து பதினெட்டாம்படி வழியாக சன்னிதானம் கொண்டு வந்து மூலவர் ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலயத்தில் மணி ஓசை எழுப்பப்பட்டது சரியாக ஆறு நாற்பது மணியிலிருந்து 6 45 மணிக்கு ள்ள பொன்னம்பலம் எப்படி மூன்று முறை ஜோதி தெளிந்தது அதை கூடி இருந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி வணங்கினார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *