கார் டிக்கியில் வளர்ப்பு தாயின் உடல்! 13 மற்றும் 16 வயது ரஷ்ய மகன்கள் கைது – அதிர வைத்த சம்பவம்

ஸ்பெயினில் வளர்ப்புத் தாய் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது மகன்களான ரஷ்ய சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரில் மீட்கப்பட்ட உடல்
ஸ்பெயினின் Cantabria நகரில் உள்ள Castro Urdiales பகுதியில், நேற்று இரவு காரின் Boot-யில் பெண்ணொருவரின் உடலை பொலிஸார் மீட்டனர்.

சில்வியா லோபஸ் (48) என்ற அந்த பெண் வாயில் அடைக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார்.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில், அப்பெண்ணின் வளர்ப்பு மகன்களான ரஷ்யாவைச் சேர்ந்த 13 மற்றும் 16 வயது சிறுவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அதற்கு முன்பாக குறித்த சிறுவர்கள் கடத்தப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் அவர்கள் Cotolino Park-யில் மறைந்திருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இந்த மரணத்தை பொலிஸார் கொலையாக கருதும் நிலையில், குறித்த சிறுவர்களின் பாட்டி வரவழைக்கப்பட்டார்.

சிறுவர்கள் கைது
இதற்கிடையில், அவர்களில் 16 வயது சிறுவன் தனது தாயின் கழுத்தில் கூர்மையான பொருளால் தாக்கியதாகவும், பின்னர் அந்த ஜோடி தப்பியோடி, அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக கடத்தப்பட்டதாக நாடகமாடியதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

ஸ்பெயினின் சட்டத்தின்படி, 13 வயது சிறுவன் குற்றஞ்சாட்டப்படுவதற்கு மிகவும் இளமையாக இருப்பதால், உளவியல் நிபுணர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் குழு அவரைக் கண்காணிக்கும் சமூக சேவைகளிடம் ஒப்படைக்கப்படுவார்.

இந்த நிலையில் Castro Urdiales மேயர் சுசானா ஹெரான் கூறுகையில், ‘எங்கள் உணர்வு முற்றிலும் சோகமானது. இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் கொடுமையானது’ என தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *