இப்பவும் இட்லி ஓர்டர் செய்து சாப்பிடும் அம்பானி! இந்த ஹொட்டலுக்கு மட்டும் தவறாமல் செல்வாராம்

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி வாரம் தவறாமல் இந்த ஹொட்டலுக்கு மட்டும் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

பொதுவாக ஒருவருக்கு பிடித்த விடயம் என்றால் அதை எப்படியாவது செய்ய வேண்டும் என்று தான் நினைப்போம். அப்படி தான் முகேஷ் அம்பானிக்கு பிடித்த ஒரு விடயத்தை எப்போதும் செய்து வருகிறார்.

சமீபத்தில் தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண முந்தைய விழா கொண்டாட்டத்திற்காக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவச அன்னதானம் வழங்கினார்.

அப்போது அவர் உணவை பரிமாறும் விதத்தை வைத்து பார்க்கையில் உணவின் மீது அவர் வைத்திருக்கும் பற்று வெளிப்படுகிறது.

முகேஷ் அம்பானி எவ்வளவு பிசியாக வேலையில் இருந்தாலும் இந்த ஹொட்டலுக்கு மட்டும் தவறாமல் சென்று வருகிறார்.

கபே மைசூர் உணவகம் (Cafe Mysore)
முகேஷ் அம்பானி தனது கல்லூரிக் காலத்தில் 1975 முதல் 1979 வரை மும்பையில் உள்ள கபே மைசூர் உணவகத்தில் சென்று சாப்பிடுவாராம்.

தற்போதும் இந்த உணவகத்தில் இருந்து ஓர்டர் செய்து சாப்பிடுவதோடு வாரம் தவறாமல் நேரில் இந்த ஹொட்டலுக்கு சென்று தென்னிந்திய உணவுகளை சாப்பிட்டு வருகிறார்.

அதுவும் அவருக்கு இட்லி, தோசை என்றால் மிகவும் பிடிக்குமாம். மிகவும் பழமை வாய்ந்த உணவகங்களில் ஒன்று தான் இந்த கபே மைசூர் உணவகம்.

1936 -ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் நாகேஷ் ராம நாயக் தான் உணவகத்தின் வெற்றிக்கு காரணம் ஆகும்.

இந்த உணவகமானது மும்பையின் கிழக்கு மாதுங்காவில் உள்ள டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் சாலையில் துர்லப் நிவாஸ் அருகே உள்ளது. காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை இந்த உணவகம் செயல்படும்.

இட்லி, வடை, கலவை சாதங்கள், உப்புமா, பூரி போன்ற தென்னிந்திய உணவுகளும் ,வட இந்திய உணவுகளும் இங்கு உள்ளது. குறிப்பாக, 84 வகையான தோசை இந்த உணவகத்தில் உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *