அதிகாலையில் எழுவதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க பார்க்கலாம்.!

ற்போதுள்ள நவீன காலகட்டத்தில் மக்கள் வேலைக்கு சென்று விட்டு இரவில் தாமதமாக தூங்குவது மற்றும் செல்போன் பார்ப்பதால் தாமதமாக தூங்குகின்றனர்.

 

இதனால், உடலில் பல்வேறு தீமைகள் ஏற்படுகிறது. ஆனால், இரவில் சீக்கிரமாக தூங்கி அதிகாலையில் எழுபவருக்கு உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம்.

 

அதிகாலையில் சூரிய ஒளி நம் உடலில் படும்போது வைட்டமின் டி சத்து நம் உடலுக்கு கிடைப்பதோடு, உடல் சுறுசுறுப்பாகவும் இருக்க வைக்கிறது.

அதிகாலை நேரத்தில் எழுபவருக்கு மன அழுத்தம் ஏற்படுவது மிகவும் குறைவு.
மூளை, இதயம் என்று அனைத்து உறுப்புகளும் சீராக செயல்பட்டு மன அமைதியை தரும்.
கல்வி கற்கும் மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அதிலும் குறிப்பாக மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் நம் உடலில் அதிகாலை நேரத்தில் அதிகமாக உருவாகுவதால் அன்றைய நாள் முழுவதும் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *