மூங்கில் குருத்து சாப்பிட்டால் உடலுக்கு இவ்ளோ நன்மைகளா? தெரிஞ்சுக்கோங்க

நோய்க்காக நாம் தினமும் உணவு உண்பதை விட மருந்து வகைகளை அதிகமாக உண்கிறோம்.

இதனால் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. மருந்து வகைகளை உண்ணாமல் எம்மை சுற்றியுள்ள ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

இயற்கை நமக்கு தந்த உணவான மருந்தை உண்பதால் உடலில் காணப்படும் அனைத்து நோய்களும் காணாமல் போய் விடும்.

அந்த வகையில் இன்று நாம் மிகவும் வித்தியாசமான மருத்துவ குணம் உள்ள மூங்கில் குருத்து பற்றி தான் பார்க்க போகிறோம். மூங்கில் குருத்தில் அதிக வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்து உள்ளன.

இவற்றில் கொழுப்பு மற்றும் கலோரி இருக்காது. இதில் அதிகளவாக பாக்டீரியா, பூஞ்சையை என்பவற்றை எதிர்க்கும் பண்புகள் உள்ளன.

இந்த மூங்கில் குருத்தை உண்பதால் உடலில் பல பிர்சனைகளுக்கு திர்வு கிடைகின்றது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மூங்கில் குருத்து
மூங்கில் குருத்து உண்பதால் நுரையீரல்கள் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு இருக்கும் கூடுதலான ரத்தப்போக்கு மற்றும் வயிற்று பிடிப்பு போன்றவற்றை இல்லாமல் செய்யும்.

உடல் பருமன் அதிகம் இருப்பவர்கள் இதை உண்டால் உடல் எடை குறையும். இது இதய தமனிகளில் இருந்து கொழுப்புகளை எளிதாக்க உதவுகிறது.

வயிற்றுபோக்கு உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் அதிலிருந்து தீர்வு கிடைக்கும். குடல் இயக்கங்களை பாதுகாக்கிறது. மலச்சிக்கலை தடுக்கிறது.

இதில் சிறந்த ஆன்டி பயாடிக் உள்ளதால் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கிறது. ஆஸ்துமா, இருமல், பித்தப்பை போன்ற பிரச்சினைகளை தீர்க்கிறது.

ரத்த அழுத்தம் குறையாமல் இருப்பவர்கள் மூங்கில் குருத்தை உணவில் சேர்த்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். இதை சாப்பிட்டால் கர்ப்பப் பை சுருங்கும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *