அயோத்தி ராமர் கோயில் விழா! மலையாள திரையுலகினரின் அதிர வைக்கும் செயல்.!

யோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று ஜனவரி 22 (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார்.

சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள்.

இந்நிலையில், மலையாளத் திரையுலக பிரபலங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையின் படங்களைத் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில், பார்வதி திருவோத்து, ரீமா கல்லிங்கல், திவ்ய பிரபா, ராஜேஷ் மாதவன், கனி குஸ்ருதி, இயக்குநர்கள் ஜியோ பேபி, ஆஷிக் அபு, கமல் கே.எம், குஞ்சிலா மாசில்லாமணி மற்றும் பாடகர் சூரஜ் சந்தோஷ் உள்ளிட்ட பல பிரபலமான மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் அரசியலமைப்பின் முகப்புரையின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இவர்களுடைய பதிவு சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் ” இந்திய மக்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மை, சோசலிஸ்ட், மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசாக உருவாக்குவதற்கும், அதன் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பதற்கும் உறுதியுடன் தீர்மானித்துள்ளோம். நீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல்.

சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை, நம்பிக்கை மற்றும் வழிபாட்டின் சுதந்திரம், அந்தஸ்து மற்றும் வாய்ப்பின் சமத்துவம் மற்றும் அவர்கள் அனைவருக்கும் மத்தியில் ஊக்குவித்தல்; சகோதரத்துவம் தனி மனிதனின் கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *