திமுக எம்எல்ஏ மகன் மருமகள் ஜாமீன் மனு தள்ளுபடி..!

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் கருணாநிதி. இவரது மகன் ஆன்ட்ரோ வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமி வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த சிறுமியை ஆன்ட்ரோவும், அவரது மனைவி மர்லினாவும் மிகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அந்த சிறுமிக்கு நாள் முழுவதும் வேலை கொடுத்தும், சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவரை அடிப்பதும், சிகரெட்டால் சூடு வைப்பதுமாக அவர்கள் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கடந்த மாதம் ஊடகங்களில் தெரிவித்தார். மேலும், தனது உடம்பில் ஆன்ட்ரோவும், அவரது மனைவியும் கத்தியால் கீறிய தழும்பையும், சிகரெட்டால் சூடு வைத்த தடத்தையும் காண்பித்தார். இது தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து, நீலாங்கரை போலீஸார் ஆன்ட்ரோ, அவரது மனைவி மர்லினோ ஆகியோர் மீது போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை கடந்த ஜனவரி 25-ம் தேதி கைது செய்தனர். மேலும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், அவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *