பெரும் சோகம்… சபரிமலைக்கு சென்ற வேன் கவிழ்ந்து 10 ஐயப்ப பக்தர்கள் படுகாயம்…!

கார்த்திகை மாதம் முதலே ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர்.

இதனால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் கரூர் அருகே வேன் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது.

அதில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து சென்ற கர்நாடகாவின் ஐயப்ப பக்தர்கள் சிலர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். அந்த வேன் தவிட்டுபாளையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்தவர்களில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஐயப்ப பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *