Bigg Boss 7 Tamil: ‘திரும்பி வந்துடாதேமா’.. தினேஷ் ரச்சிதா குறித்து விசித்ரா பேசிய கமெண்ட்! – கொத்தி கிழித்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி அதன் கிளைமாக்ஸை நெருங்கி இருக்கிறது. இன்றைய தினம் டபுள் எவிக்‌ஷன் இருப்பதாகவும், அதில் ரவீனாவும், நிக்சனும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே விசித்ரா தினேஷின் பர்சனல் விஷயங்கள் குறித்து பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

ஆம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 89ம் நாள் எபிசோடில் ரவீனா விசித்ராவை பாத்திரம் கழுவித்தருமாறு கேட்டார். பேசிக்கொண்டிருந்தவளை தடுத்து, இதில் ஈடுபடுத்திய கோபத்தில், அவர் எல்லா வேலைகளையும் தன் மீதே சுமத்துவதாக பொரிந்து தள்ளினார்.

குறிப்பாக மணி, ரவீனா, தினேஷ் ஆகிய மூவரையும் பற்றி ‘இதுங்க மூஞ்சியெல்லாம் பார்க்கவே வெறுப்பா இருக்கு’ என்று பேசிய விசித்ரா, தினேஷின் மனைவி ரச்சிதா அவரை விட்டு போனதை குறிப்பிட்டு, தயசு செய்து ‘திரும்பி வந்துடாதேமா’ என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து இன்றைய எபிசோடில் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி இருக்கிறார். அது தொடர்பான புரமோ வெளியாகி இருக்கிறது. அதில் கமல் விசித்ராவிடம், நீங்கள் கேமராவுக்காக தனியாக பேசுகிறீர்களே என்று கேட்க, விசித்ரா நானா? என்று எதுவும் தெரியாதது போல சொன்னார். அதற்கு ஆமாம் என்று சொல்லி, இன்னொருவருடைய பர்சனல் வாழ்க்கைக்குள் இறங்கி பேசுவது என்று கமல் கேட்டு முடிக்கவில்லை.. உடனே விசித்ரா எதை சொல்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு கமல் அதை நானும் மறுபடி சொல்லி இன்னொருவரை புண்படுத்த விரும்ப வில்லை என்று சொல்ல, பேசினேன்… பேசினேன்… என்று ஒத்துக்கொண்டார் விசித்ரா. அதற்கு கமல் அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம்.. இன்னொருத்தருடைய கல்யாணத்திற்கு நாம் கவுன்சிலராக இருக்க முடியாது என்று பேசினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *