Breaking : பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே.. மர்ம பொருள் வெடித்ததில் 4 பேர் காயம் – என்ன நடந்தது?

பெங்களூரு ராஜாஜி நகர் அருகே உள்ள மிகவும் பிரபலமான ஒரு உணவு விடுதி தான் “ராமேஸ்வரம் கஃபே”. வழக்கம்போல மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த இடத்தில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததாகவும், இதில் மூன்று முதல் நான்கு பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

வெடித்தது சமையல் எரிவாயுவா? அல்லது வேறு ஏதேனும் மர்ம பொருளா என்பது குறித்த ஆய்வுகளை தற்பொழுது அப்பகுதி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *