Breaking: விருதுநகர் பட்டாசு ஆலையில் கோர வெடிவிபத்து; 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அடுத்த ராமுதேவன் பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் இன்று பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 8 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *