BUDGET 2024 MODI: செய்தியாளர்களை சந்தித்தார் பிரதமர் மோடி – நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளுக்கு முக்கிய கோரிக்கை

PMMODI ON BUDGET 2024: மக்களவை தேர்தலில் வென்று மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என, பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது மூலம் மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண்களின் வலிமை குறித்து பறைசாட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது. நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம். இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது. தேர்தலுக்கு பிறகு பாஜக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *