கெட்ட கொழுப்புகள் கரையணுமா? வீட்டில் மாம்பழம் இருந்தாலே போதும்- அவசியம் தெரிஞ்சிக்கோங்க

பொதுவாக கோடைக்காலங்களில் அனைவரின் வீடுகளிலும் இருக்கக் கூடிய பழங்களில் ஒன்று தான் மாம்பழம்.

மாம்பழம் அதிகமாக இருக்கின்றன என்பதால் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் மாம்பழத்தை தவறான நேரங்களில் சாப்பிடுவது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும், மாம்பழங்களில் அமிலேஸ், புரோட்டீஸ் மற்றும் லிபேஸ் போன்ற செரிமான நொதிகள் இருக்கின்றன.

இது கெட்ட கொழுப்பை கரைத்து வயிற்றில் உள்ள உப்புசம், வாயு போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது.

அந்த வகையில் கோடைக்காலங்களில் ஏன் மாம்பழங்கள் சாப்பிடுகிறார்கள்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

மாம்பழங்களின் நன்மைகள்

1. பழங்களில் என்றாலே நோய் எதிர்ப்புக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் மாம்பழங்களில் வைட்டமின் A மற்றும் C இருக்கின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

2. கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து செரிமானத்திற்கு தேவையான நொதியங்களை சீர்ப்படுத்தும். டயட் பிளானில் இருப்பவர்கள் மாம்பழங்களை தாராளமாக சாப்பிடலாம்.

3. உயர் ரத்த அழுத்தம் அதிகமாக ஏற்படுபவர்களுக்கு மாம்பழம் சிறந்த மருந்தாக இருக்கும். இந்த பழத்தில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை பார்க்கின்றது.

4. கர்ப்பிணி பெண்கள் மாம்பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். இதிலிருக்கும் புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவை அவர்களின் வாயிற்கு இனிமையாக இருக்கும்.

5. மாதவிடாய் நேரங்களில் வெறும் வயிற்றில் மாம்பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனின் மாம்பழங்களில் இருக்கும் சில பதார்த்தங்கள் உதிரப்போக்கை அதிகப்படுத்தும்.

6. பல் முதல் செரிமானம் வரை அனைத்து வேலைகளுக்கு மாம்பழங்கள் உதவியாக இருக்கின்றன. வாயில் கடித்து மென்றால் பற்களில் இருக்கும் ஈறுகள் வலுவடையும் என கூறப்படுகின்றது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *