மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கம்., பதற்றத்தில் அமெரிக்கா., ரோந்து கப்பல்கள், விமானம் கொடுத்து உதவி

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் அமெரிக்காவும் பதற்றத்தில் உள்ளது.

இதனால், மாலத்தீவிற்கு 4 ரோந்து கப்பல்கள் மற்றும் விமானம் ஒன்றை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியாவுடனான பதற்றம் மற்றும் சீனாவுடனான மாலத்தீவுகளின் நட்புறவு அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவும் செயலில் இறங்கியுள்ளது.

அமெரிக்காவின் உதவி வெளியுறவு செயலாளர் டொனால்ட் லூ (Donald Lu) அண்மையில் மாலைதீவுக்கு சென்றிருந்தார்.

இதனிடையே மாலத்தீவு ராணுவத்திற்கு 4 ரோந்து கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் வழங்குவதாக டொனால்ட் லு அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அமைதி நிறுவனத்தின் (United States Institute for Peace) நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை லு இதனைத் தெரிவித்தார்.

சீனாவின் திட்டம்
மாலத்தீவில் உள்ள ஒரு தீவில் உளவு மையம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் வேளையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் சீனா வெற்றி பெற்றால், இந்தியா மட்டுமின்றி, Diego Garcia கடற்படை தளத்திற்கு அடிக்கடி வரும் அமெரிக்காவின் போர்க்கப்பல்களையும் எளிதாக கண்காணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

டியாகோ கார்சியா என்பது பிரித்தானியாவிற்குச் சொந்தமான ஒரு தீவு, அதில் அமெரிக்கா கடற்படைத் தளத்தைக் கொண்டுள்ளது.

டியாகோ கார்சியா மாலத்தீவிலிருந்து சில நூறு கடல் மைல்கள் தொலைவில் உள்ளது மற்றும் இந்தியப் பெருங்கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தக் கடற்படைத் தளத்தின் மூலம், சீனாவை அமெரிக்கா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இதுமட்டுமின்றி, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அணு குண்டுவீச்சுகளை கூட அமெரிக்கா இங்கு நிலைநிறுத்தி வருகிறது.

மாலத்தீவானது அளவில் பிரான்ஸ் போல..
மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் சீனப் பயணத்திற்குப் பிறகு, சீனா மாலேயில் தனது இருப்பை வேகமாக விரிவுபடுத்துகிறது. முய்சு சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை கொடுக்கிறார். அதுவும் மாலத்தீவு சீனாவின் கடனில் இருக்கும் போது.

சீனாவின் இந்த செல்வாக்கை மழுங்கடிக்க, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மாலே சென்றடைந்தார்.

டொனால்ட் லூ கூறுகையில், ‘மாலத்தீவில் 1200 தீவுகள் உள்ளன. இதன் பிராந்திய பரப்பளவு 53,000 சதுர கிலோமீட்டர். இது பிரான்சின் அளவு. இந்த வகையில் மாலத்தீவு ஒரு பாரிய நாடு. நாங்கள் மாலத்தீவை ஒரு சிறிய நாடாகக் கருதுகிறோம், ஆனால் பாதுகாப்புத் தேவைகளைப் பற்றி பேசினால் அது மிகப் பாரியது.

இவ்வளவு பாரிய பகுதியின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் உபகரணங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று டொனால்ட் லு கூறினார்.

இதை நிறைவேற்றுவதற்காக மாலத்தீவுகளுக்கு நிகழ்நேர வணிக செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் ரோந்து படகுகள் மற்றும் விமானங்களை வழங்குவதற்கான முயற்சிகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

மாலத்தீவு கடற்படைக்கு நான்கு ரோந்துப் படகுகள் வழங்கப்படும் என்றும், பிராந்திய பாதுகாப்புக்கு இந்த வளங்கள் முக்கியமானவை என்பதால், ஒரு விமானத்தை வழங்குவதற்கான விவாதங்கள் நடந்து வருவதாகவும் லூ அறிவித்தார்.

ரோந்துப் படகுகளை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் சம்மதித்துள்ளதா இல்லையா என்பதை மாலைதீவு அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *