நீதிமன்றத்தில் திடீரென வந்து அதிர்ச்சி கொடுத்த தர்ஷினி…. உடைந்து போன ஈஸ்வரி

எதிர் நீச்சல் சீரியலில் தர்ஷினி காணாமல் போயுள்ள நிலையில், தற்போது நீதிமன்ற விசாரணையின் போது, வீடியோ கால் மூலமாக வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

எதிர் நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.

அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தியை களமிறக்கியுள்ளனர். ஆனாலும் சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதுடன், குணசேகரன் மறைவிற்கு பின்பு இறங்கிய டிஆர்பி-யை ஏற்ற பல வழிகளில் சீரியல் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

தற்போது அந்த டிஆர்பி-யை கதிரை வைத்து பிரபல ரிவி அடைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கதிர் தனது அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளார்.

தர்ஷினி கொடுத்த ஷாக்
கதிர் மட்டுமின்றி ஞானமும் குணசேகரனை எதிர்த்து நிற்கும் நிலையில், வீட்டில் உள்ள பெண்கள் குணசேகரன் சதியால் காவல்நிலையத்தில் இருக்கின்றனர்.

நந்தினியை பார்த்து கதிர் துடிதுடித்துப் போன காட்சிகள் வேற லெவல் என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் குடும்ப பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். இத்தருணத்தில் யாரும் எதிர்பாராத விதமாக தர்ஷினி வீடியோ கால் மூலமாக வந்து பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தர்ஷினி குணசேகரனுக்கு ஆதரவாக பேசப் போகின்றார் என்பது போன்று தான் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *