தேமுதிக அறிவிப்பு : வரும் 24-ம் தேதி விஜயகாந்த் படத்திறப்பு விழா..!

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவரது மறைவு தமிழக மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திய பின், அவருக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்தார். மேலும், தீவுத் திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இடம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களில் பலர் பாராட்டுகளை பதிவு செய்தனர்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தமுடியாத திரைப்பிரபலங்கள் பலர், தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரியாதை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

குறிப்பாக, மறைந்த விஜயகாந்துக்கு பிரதமர் மோடி அவரது ‘X’ பக்கத்தில் இரங்கல் பதிவு வெளியிட்டிருந்தார். மேலும், “சினிமா மட்டுமின்றி அரசியலிலும் விஜயகாந்த் ‘கேப்டன்’ தான் என பிரதமர் மோடி பேசியது தேமுதிக தொண்டர்களுக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் ஆறுதலாக இருந்ததாக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு இன்று நினைவேந்தல் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் படத்திறப்பு விழா, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வரும் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *