சிவகார்த்திகேயனின் அடுத்த பட டீசரைப் பார்த்து வியந்து பாராட்டிய இயக்குனர் நெல்சன்!

மல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதனால் காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த படத்தின் ஷூட்டிங் அதிக நாட்கள் நடந்ததால் பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இப்போது படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி முதல் லுக் டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அறிமுக டீசரைப் பார்த்துள்ள இயக்குனர் நெல்சன் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் “வாவ்… இப்போதுதான் சிவகார்த்திகேயன் 21 படத்தின் டீசரைப் பார்த்தேன். ஒரு முழுமையான எழுச்சி. இந்த உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை உலகம் காண ஆர்வமாக இருக்கிறேன். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *