கார்த்திகை மாதம் பிறந்தவர்களின் பரம ரகசியம் பற்றி தெரியுமா…?

கார்த்திகை மாதம் என்பது தமிழ் மாதத்தின் 8வது மாதமாகும். ஜோதிடம் படி, சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலத்தை தான் கார்த்திகை மாதம் என்று அழைக்கிறோம். இப்போது இந்த கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குண்ல் நலன்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் கல்வி சிறந்து விளங்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள். கடவுளை மட்டுமே பெரிதாக மதிப்பவர்கள். குறிப்பாக இவர்கள் தங்கள் கொள்கையை விட்டுக் காரியத்தை சாதிக்க விரும்ப மாட்டார்கள். எதையும் அதன் போக்கில் விட்டுவிடுபவர். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் அனுபவங்களைக் அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை சிறந்த முறையில் கையாளும் திறமை உடையவர்கள்.

இரக்க குணத்திற்கு பெயர் பெற்றவர்கள் இவர்கள். மேலும் இவர்கள் கண்ணியமானவர்கள். பொதுவாகவே, இவர்கள் யாரிடமும் அதிகமாகப் பழக மாட்டார்கள். இதனாவே, இவர்களுக்கு நண்பர்கள் மிக குறைவு. ஆனால் இவர்களோ தங்கள் எதிரிகளைத் தன்னுடைய வசமாக்கிக் கொள்ளும் திறமையை உடையவர்கள்.

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் ஒரு செயலில் இறங்கி விட்டால் அந்த செயலை சிறப்பாக செய்து முடிப்பார்கள். இவர்கள் தங்கள் இளம் வயதிலேயே பல விதமான சோதனைகள் மற்றும் வேதனைகளை சந்திப்பார்கள். அதனால் இவர்கள் தங்கள் இளம் வயதில் முதிர்ந்த அனுபவத்தை பெற்றிருப்பார்கள். கடவுளின்மீது அதிக பற்று உடையவர்கள்.. இவர்களிடம் சகிப்புத் தன்மை அதிகம் இருப்பதால், சமுகத்தில் இவர்கள் உயர்ந்த அந்தஸ்தை எளிதில் அடைவார்கள்.

இம்மாதத்தில் பிறந்தவர்கள், யாருக்காகவும் தன்னுடைய குறிக்கோளை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் மற்றவர்களின் குறை மற்றும் குற்றங்களை ஒளிவு மறைவு இல்லாமல் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சொல்லிவிடுவார்கள். இதனால் தான் என்னவோ, இவர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. பழிக்குப் பழி வாங்கும் குணம் உடையவர்கள். எப்படியெனில், தன்னை பற்றிப் புறம் பேசுபவர்களையும், தனக்கு தீங்கு விளைவிக்க முயன்றவர்களையும் தகுந்த நேரம் பார்த்து பழிக்குப் பழி வாங்கிவிடுவார்கள்.

அதுபோல், கார்த்திகை மாதத்தில் பிறந்த பெண்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இம்மாதம் பிறந்த பெண்கள் பெரியவர்களிடம் மரியாதை மற்றும் பணிவுடன் நடந்து கொள்வார்கள். இவர்கள் தானம், தர்மம் செய்வதில் வல்லவர்கள். குறிப்பாக இந்த மாதத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் ஆண் சகல பாக்கியங்களையும், நன்மைகளையும் வாழ்க்கையில் பெறுவது உறுதி…

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *