மே மாதத்தில் பிறந்தவங்க எப்படியெல்லாம் நடந்துப்பாங்கன்னு தெரியுமா?

எண் கணித ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவர் பிறந்த திகதிக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதை போல் அவர்கள் பிறக்கும் மாதமும் தாக்கம் செலுத்துகின்றது.

அந்த வகையில் மே மாததில் பிறந்தவர்கள் பற்றிய சில சுவாரஸ்யமான விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்டின் ஐந்தாவது மாதம் தான் மே மாதம். இது 31 நாட்கள் நீளம் கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும்.

ஆனால் மக்களின் குணாதிசயங்களும், பண்புகளும் மாதந்தோறும் மாறுபடும். அதில், மே மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் மிகவும் உற்சாகமாகவும், கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

விசேட பண்புகள்
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அனைவருடனும் வெளிப்படையாகவும், உண்மையாகவும் இருக்கும் அற்புதமானவர்கள்.

தங்களை ஊக்கப்படுத் வேறு யாரையும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள் இவர்களே இவர்களை ஊக்கப்படுத்திக்கொண்டு வெற்றியை நோக்கி செல்லக்கூடிய தன்மை கொண்டவர்கள்.

நினைத்ததை அடைய வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு இயல்பிலேயே ஒரு வசீகர தன்மை இருக்கும். இவர்களை கடப்பவர்கள் திரும்பிப்பார்க்கும் அளவுக்கு நெடியில் ஈர்க்க்கூடிய முகம் மற்றும் கண்களை கொண்டிருப்பார்கள்.

இவர்களைச் சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் இருந்துகொண்டே புகழ்ந்துகொண்டே இருக்கும். இதில் ரிஷபம் மற்றும் மிதுன ராசி்க்காரர்கள் இதிலிருந்து சற்று மாறுப்பட்டவர்கள் இவர்கள் தனிமையை அதிகமாக விரும்புவார்கள்.

மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு கற்பனை சக்தி அதிகமாக இருக்கும் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள்.இதனால் அவர்களுக்கு அந்த வாழ்கை நிச்சயமாக அமைந்துவிடும்.

இவர்கள் எந்த விடயத்தையும் திட்டமிடாமல் செய்ய முற்பட மாட்டார்கள். எதிர்காலம் குறித்து அதிக அக்கறையுடன் இருக்கும் இவர்கள் இயற்கை மீது காதல் கொண்டவர்களாகவும் பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இசை மற்றும் நடனத்தின் மீது இவர்களுக்கு இனம்புரியாத மோகம் எப்போதும் இருக்கும். இவர்களை கலாரசிகர்கள் என்று கூட சொல்லாம்.

எப்போதும் யாருக்கும் அடிமையாக இருக்க விரும்ப மாட்டார்கள். தனது கருத்துக்கு முக்கியத்துவம் இல்லாத இடத்தில் இருக்கவே விரும்ப மாட்டார்கள்.

காதல் உறவில் மிகவும் நேர்மையாக நடந்துக்கொள்ளும் அவர்கள். துணையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அதிகம் ஆசைப்படுவார்கள் அது தான் அவர்களுக்கு எதிர்மறை விளைவுகளை கொடுக்கும். இருப்பினும் அதனை அவர்களால் மாற்றிக்கொள்ளவே முடியாது.

அவர்களுக்கு மிக அதிகமாக கோபம் ஏற்படும். ஆனால் மிக விரைவில் அமைதியாகி விடுவார்கள். பாசம் வைத்துவிட்டால் மிகவும் உண்மையாக நடந்துக்கொள்வார்கள்.

எந்த விடயத்திலும் வெற்றியடைந்தே ஆக வேண்டும் என சிந்திக்கும் அவர்கள் இருக்கும் இடத்தில் முதல் நிலை வகிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அழகு சாதன பொருட்கள் மீதும் வாசனை பொருட்கள் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *