டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் போது கல்விப் பின்னணி கேட்கப்படுவதன் காரணம் என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கும் பொழுது நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்வதில் உங்கள் இன்சூரர் ஆர்வம் காட்டலாம். இது உங்களுக்கு வித்தியாசமான ஒன்றாக தோன்றலாம். ஆனால் இன்சூரன்ஸ் வழங்குனர்கள் இந்த விவரத்தை கருத்தில் கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

பிரீமியம் விகிதங்கள் என்பது கிளைம் செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் மற்றும் அதன் விலையின் அடிப்படையில் இறுதியாக அமைகிறது. ஒரு தனி நபரின் வாழ்க்கை முறை மற்றும் தேர்வுகளை புரிந்து கொள்வதன் மூலமாக ஏற்படக்கூடிய சாத்தியமான அபாயங்களை இன்சூரர் தெரிந்து கொள்கிறார். எனவே ஒரு நபரின் விரிவான ரிஸ்க் ப்ரோபைலை உருவாக்குவதற்கு அவரின் படிப்பு பின்னணி தேவைப்படுகிறது.

தொடர்புடைய அபாயங்களை கணிப்பதற்கு உதவுகிறது:

ஒருவர் எந்த அளவிற்கு படித்திருக்கிறார் மற்றும் பாலிசி ஹோல்டரின் வாழ்நாளை பாதிக்கக்கூடிய அபாய காரணிகளுக்கு இடையே உள்ள தொடர்பு என்பது இன்சூரர்கள் கருத்தில் கொள்ளும் ஒரு முக்கியமான விஷயம். நன்றாக படித்து இருக்கக்கூடிய நபர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நீண்ட காலம் வாழக்கூடியவர்களாக இருக்கின்றனர் என்று பல ஆய்வுகள் கூறுகின்றது. எனவே இன்சூரர்கள் இந்த தகவல் மற்றும் பிற காரணிகளை பயன்படுத்தி தொடர்புடைய அபாயங்களை மதிப்பிடுவதன் மூலமாக கவரேஜ் மற்றும் பிரீமியம் தொகைகளை நிர்ணயிக்கின்றன.

தவறான முறையில் விற்பனை செய்வதை தடுக்க உதவுகிறது:

இன்சூரன்ஸ் பாலிசிகள் உட்பட முக்கியமான டாக்குமெண்ட்களை புரிந்து கொள்ளும் தனிநபரின் திறனை மதிப்பிடுவதற்கு படிப்பு உதவுகிறது. கவரேஜ் குறித்த நல்ல புரிதலும் சரியான முடிவுகளையும் எடுக்கும் அளவுக்கு கிளையண்டுகள் படித்தவர்களாக இருக்கிறார்களா என்பதை இன்சூரர்கள் உறுதி செய்கின்றனர்.

பொதுவாக டேர்ம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி ஹோல்டரின் படிப்பு பின்னணி பற்றி கேட்பதன் முக்கிய காரணம் என்னவென்றால், அவர்கள் பாலிசி ஆவணங்களை முழுமையாக படித்து அதில் உள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்படுவதை தடுப்பதற்காகவும் படிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. கூடுதலாக அதிக படிப்பு மற்றும் சம்பளம் ஆகிய இரண்டுமே பெரிய அளவிலான இன்சூர் செய்யப்பட்ட தொகையை அதிகரிக்கும்.

இது பாலிசிதாரர்கள் மற்றும் இன்சூரரிடையே தேவையற்ற தவறான புரிதல் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது. தாங்கள் வாங்கி இருக்கக்கூடிய இன்சூரன்ஸ் பாலிசி என்னென்ன மாதிரியான கவரேஜ் வழங்கக்கூடும் என்பதை படித்தவர்கள் முழுமையாக புரிந்து கொள்கிறார்கள்.

படிப்பு என்பது கருத்தில் கொள்ளப்படும் பல்வேறு காரணிகளில் ஒன்றாக மட்டுமே அமைகிறது. இதைத் தவிர ஏற்படக்கூடிய சாத்தியமான ஆரோக்கிய அபாயங்கள் மற்றும் ஆயுட்காலம் போன்றவற்றின் அடிப்படையில் இன்சூரர்கள் இன்சூரன்ஸ் விகிதங்களை அமைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பாலிசி ஹோல்டரின் படிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு ஒருவருக்கு கவரேஜ் வழங்க வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை இன்சூரர்கள் எடுப்பதில்லை. காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை நிர்ணயிப்பதில் படிப்பு ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே படிப்பு மட்டுமே இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையின் முதன்மை நிர்ணயிப்பானாக இருக்காது. வயது, ஆரோக்கியம், வேலை இடத்தில் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற பல்வேறு காரணிகள் இதில் அடங்கும்.

எனவே அடுத்த முறை நீங்கள் ஒரு டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்கள் இன்சூரர் உங்களின் படிப்பை பற்றி கேட்கும் பொழுது அதன் முக்கியத்துவத்தை நீங்கள் நிச்சயமாக புரிந்து கொள்வீர்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *