அரைச்ச இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருக்கணுமா? அப்போ இப்படி பண்ணுங்க

உணவு என்பது எல்லோருக்கும் ஒரு அத்தியாவசியமான தேவையாகும். நாம் எல்லோரும் காலை உணவை மறக்காமல் எடுத்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் காலை உணவாக நாம் இட்லி, தோசை போன்ற உணவுகளை உண்பது வழக்கம். இந்த இட்லி தோசை உணவுகள் உண்பதால் அடிக்கடி பசி எடுக்காது.

மிகவும் விரைவாக ஜீரணமடையும். இந்த மாவுக்கலவை செய்ய பயன்படுத்தும் உளுந்து தானியத்தில் அதிக சத்து நிறைந்து உள்ளது.

இந்த இட்லி, தோசைக்கான மாவை அநேகமானோர் ஒரு நாள் முன்பே தயார் செய்து வைக்கின்றனர். இதில் சில மாவுக்கலவைகள் வீணாகி புளித்து விடும்.

இட்லி தோசை மாவுக்கலவை புளிக்காமல் புதிய மாவு போல இருப்பதற்கு என்ன செய்யலாம்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இட்லி , தோசைமாவு
1. நீங்கள் ஊளுந்து ஊற வைக்கும் போது ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி ஊற வைக்கும் போது 3 அல்லது 4 மணிநேரம் மட்டுமே ஊற வைக்க வேண்டும்.

இந்த நேர அளவை விட இதை இரவு எல்லாம் ஊற வைப்பதால் நீங்கள் இதில் அரைத்து எடுக்கும் மாவு புளித்து விடும். இந்த மாவு அரைக்கும் போது ஜஸ் வாட்டரை மட்டும் கொண்டு அரைக்க வேண்டும்.

இது இரண்டையும் சேர்த்து கலக்கும் போது கைகளை பயன்படுத்த கூடாது. இந்த மாவை டப்பா அல்லது ஒரு பாத்திரத்தில் கொட்டி காற்று உள்ளே புகாதவாறு பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் ஒவ்வொரு தடவையும் மாவை கிண்டும் சந்தர்ப்பங்களில் கரண்டியை கொண்டு கிண்ட வேண்டும். இந்த மாவு கலவை போடும் பாத்திரத்தில் இரண்டு வெற்றிலை காம்பு வைத்து போட்டால் மாவு புளிக்காமல் இருக்கும்.

மற்றும் மாவுக்கு மேல் வாழையிலையை நறுக்கி போட்டாலும் மாவு புளிக்காமல் இருக்கும். மாவு அரைத்து உப்பு போட்டு கலந்த பிறகு, அதில் 5 ஓமவல்லி இலைகளை போட்டாலும் மாவு புளிக்காது.

குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் மாவிற்கு உப்பு சேர்க்காமல் வைத்தால் மாவு புளிக்காமல் இருக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *