பெண்ணின் காதுக்குள் நுழைந்து கூடு கட்டிய சிலந்தி.. ஷாக் சம்பவம்!

பகுதி நேர ஆசிரியர் மற்றும் கன்டன்ட் கிரியேட்டராக பணிபுரிந்து வருபவர் லூசி வைல்ட். இவருக்கு திடீரென்று காதிற்குள் அரிக்கும் ஒரு உணர்வு மற்றும் அதன் பின்பு கூச்சலிடம் சத்தம் கேட்க துவங்கியுள்ளது. அது காதில் இருக்க கூடிய அழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என அலட்சியமாக ஆரம்பத்தில் இவர் கருதி இருக்கிறார்.

ஆனால் இதே நிலை நாள் முழுவதும் நீடித்ததால் சுதாரித்துக் கொண்டார் லூசி வைல்ட். இது என்ன மாதிரியான உணர்வு என்பதை கண்டுபிடிப்பதற்காக வைல்ட் தன்னிடம் இருந்த ஒரு ஸ்மார்ட்பட் என்ற எலக்ட்ரானிக் காது சுத்தப்படுத்தக்கூடிய ஒரு சாதனத்தை பயன்படுத்தி உள்ளார். அதில் ஒரு கேமராவும் பொருத்தப்பட்டு இருந்தது. அதன் போது தான் ஒரு எட்டு கால் பூச்சி அவரது காதிற்குள் இருப்பதை அவர் கண்டுபிடித்துள்ளார்.

“எனது காதிற்குள் இது எப்படி வந்தது என்று நான் குழம்பி போய் விட்டேன்,” என்கிறார் 29 வயதான லூசி வைல்டு.

மூன்று பிள்ளைகளுக்கு தாயான இவர் உடனடியாக UK-வின் எமர்ஜென்சி எண்ணை அழைத்திருக்கிறார். எட்டுக்கால் பூச்சியை எப்படியாவது வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக நான் ஒரு சில முயற்சிகளை செய்தேன். பிறகு நாங்கள் 111 [UK அவசரகால எண்] என்ற அவசர எண்ணை அழைத்தோம். பின் எட்டுக்கால் பூச்சியை வெளியேற்றினோம்,” என்கிறார் திருமதி வைல்ட். “எட்டுக்கால் பூச்சி என்னுடைய சுண்டு விரல் நகம் அளவிற்கு அதாவது ஒரு சென்டிமீட்டர் அளவிற்கு இருந்தது.”

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *