ஈரோடு: மகளின் காதல்; சொத்து விவகாரம் – மனைவி, மகளை ரோட்டில் வைத்து தாக்கிய நபர் – அதிர்ச்சி

ஈரோடு மாவட்டம், சுண்ணாம்பு ஓடை பகுதியில் வசித்து வந்த தம்பதிக்கு இரு மகள்கள். கணவர் தோல் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இந்த தம்பதியின் விவாகரத்து தொடர்பான மனு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மகள்கள் இருவரும் தாயுடன் வசித்து வருகின்றனர். இதில் மூத்த மகள், ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பையன் வீட்டிலும், பெண்ணின் தாயும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் இதற்கு தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது சம்பாதியத்தில் வாங்கிய சொத்துகளை திருப்பி அளிக்குமாறு மனைவியிடம் கணவன் கேட்டு பிரச்னை செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், தாயிக்கு ஆதரவாக மகள் பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கணவர் தனது உறவினர்கள் அழைத்து வந்து மனைவி, மகள் ஆகியோரை சாலையில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து நேற்று கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் மகள் அளித்த புகாரின்பேரில் தந்தை உள்ளிட்ட சிலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மகள் உள்பட சிலர் தாக்கியதாக தந்தையின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் மகள் உள்பட சிலர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மகள் , மனைவியை உறவினர்களுடன் வந்து தாக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *