ஸ்ரீதேவி மரண விவகாரத்தில் சிக்கிய பிரபல யூடியூபர்.. வழக்கு பதிந்த சிபிஐ… என்ன காரணம் தெரியுமா?

நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைந்த விவகாரத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் டெல்லி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த ஸ்ரீதேவி 2018 பிப்ரவரி மாதம் துபாயில் உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவி மரணம் இயற்கையானதா? அல்லது மரணத்திற்கு பின்னால் வேறு என்னும் காரணம் உள்ளதா? என்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் அப்போது எழுந்தன.

இருப்பினும் ஸ்ரீதேவியின் மரணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. துபாயில் உள்ள தனது ஹோட்டல் அறையில் ஸ்ரீதேவி குளியல் அறையில் மூழ்கி இறந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்தன. அதன் பின்னர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பதில் அளித்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஸ்ரீதேவியின் உணவு பழக்கமும் அவர் உப்பு எடுத்துக் கொள்வதை தவிர்த்ததும் தான் மரணத்திற்கு முக்கிய காரணமாக தெரிவித்து இருந்தார்.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பிரபல யூடியூபர் பின்னிட்டி என்பவர் பரபரப்பான தகவல்களை அளித்து வந்தார். அந்த வகையில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரின் கடிதங்கள் என்று கூறி ஒரு சில ஆவணங்களை அவர் யூடியூப் சேனலில் காண்பித்துள்ளார். இந்த விவகாரம் பலரது கவனத்தைப் பெற்ற நிலையில், அந்த கடிதங்கள் உண்மைதானா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் அவை போலியானவை என்று தெரிய வந்த நிலையில், யூடியூபர் பின்னிட்டி அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் காமத் ஆகியோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். யூடியூபர் பின்னிட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தை சேர்ந்தவர்.

அவர் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் போலியான கடிதங்களை பகிர்ந்ததாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் போலியான ஆவணங்களை பகிர்ந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து பதில் அளித்துள்ள யூடியூபர் பின்னிட்டி தன்னுடைய தரப்பு அறிக்கை எதையுமே சிபிஐ பதிவு செய்யாமல் தன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *