பயங்கர சத்தத்துடன் மண்ணில் புதைந்த தங்க சுரங்கம்.. தொடரும் பலி எண்ணிக்கை..!

கடந்த ஜனவரி 19ம் தேதி திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது.இந்த திடீர் சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதையுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் நடந்தபோது பலத்த சத்தம் கேட்டதாகவும், நிலம் அதிர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் இந்த தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. இந்நிலையில், தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை உயரலாம் என்று கூறப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்கள் தரையில் கண்டெடுக்கப்பட்டன. மாலியில் பல தங்கச் சுரங்கங்கள் உள்ளன. இதுபோன்ற விபத்துகள் அங்கு வாடிக்கையாகிவிட்டன. ஏனெனில் இதுபோன்ற சுரங்கப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை என்று கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *