குட் நியூஸ்..! வரும் 1-ம் தேதி முதல் சிலிண்டர் விலை ரூ.450.. முதல்வர் அதிரடி அறிவிப்பு

ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து. கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், இம்முறை 115 இடங்களை கைப்பற்றிய பாஜக ஆட்சி கட்டிலில் மீண்டும் அமர்ந்தது.

இந்த தேர்தலை மோடியின் கியாரண்டி என்ற முழக்கத்துடன் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து வாக்காளர்களை சந்தித்தது. முக்கியமாக ஆட்சிக்கு வந்தால், எரிவாயு சிலிண்டர் விலையை குறைப்போம் என அறிவித்திருந்தது. தற்போது பாஜக ஆட்சி அமைத்து அக்கட்சியின் பஜன் லால் ஷர்மா முதல்வராக பொறுப்பேற்று உள்ளார்.

இந்த நிலையில், தனது தேர்தல் வாக்குறுதியை பாஜக தற்போது நிறைவேற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளர்களுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ரூ.450 என்ற மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். ஆண்டுக்கு இவ்வாறு 12 சிலிண்டர்கள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மானியத்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஜக டபுள் இன்ஜின் அரசு இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளதாகவும் இந்த அரசு ராஜஸ்தானின் தாய்மார்களை மதித்து, அவர்களை உயர்த்தி வலுப்படுத்தும் நோக்கத்தில் உறுதிப்பூண்டுள்ளது என அம்மாநில முதல்வர் பஜன்லால் ஷர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 76 லட்சம் குடும்பத்தினர் அம்மாநிலத்தில் பயனடைந்து வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *