கூகுள்பே, போன்பே… தவறுதலாக பணம் அனுப்பினால் என்ன செய்ய வேண்டும்? இதோ விவரம்!

யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் உங்கள் பணத்தை தவறுதலாகப் பரிமாற்றம் செய்ய நேர்ந்தால், பரிவர்த்தனையை உடனடியாக திருப்ப முயற்சிக்க வேண்டும்.

UPI பரிவர்த்தனைகள் பொதுவாக இறுதியானவை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், தற்செயலான பரிவர்த்தனையை நீங்கள் மீட்டெடுக்கும் சூழ்நிலைகள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தற்செயலான பரிவர்த்தனை ஏற்பட்டால் ஒருவர் பின்பற்ற வேண்டியவை:

1. வங்கிக்குத் தெரிவிக்கவும்: முதலில், நீங்கள் வங்கி அல்லது UPI சேவை வழங்குநரைத் (Google Pay போன்றவை) தொடர்பு கொண்டு, கவனக்குறைவாகப் பணப் பரிமாற்றம் நடந்ததைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

2. உடனடியாக செயல்படுங்கள்: வங்கிக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இதை எவ்வளவு சீக்கிரம் செய்கிறீர்களோ, அவ்வளவு நல்லது.

3. குறைதீர்ப்பாளரை அணுகுதல்: உங்கள் கேள்விக்கு வங்கி பதிலளிக்கத் தவறினால், வங்கியின் ஒம்புட்ஸ்மேனை (குறைதீர்ப்பாளர்) அணுகுவது உங்கள் கடமையாகும். உங்களுக்கு உண்மையான குறை இருந்தால் குறைதீர்ப்பாளரின் உதவியை நாடுவதில் தவறு எதுவுமில்லை.

4. NPCI-ஐத் தொடர்புகொள்ளவும்: நீங்கள் கோரிய விதத்திலும் படிவத்திலும் உங்கள் குறை தீர்க்கப்படாவிட்டால்; நீங்கள் NPCI-ஐ அணுக வேண்டும்.

NPCI வங்கி ஒழுங்குமுறை அமைப்பான RBI-ஆல் உருவாக்கப்பட்டது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்பது இந்தியாவில் சில்லறை கட்டணங்கள் மற்றும் தீர்வு அமைப்புகளை இயக்குவதற்கான ஒரு அமைப்பாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *