Guru: குரு செய்வது உறுதி.. யோக ராசிகள் இவர்கள்தான்

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 12 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது குரு பகவான் மேஷ ராசியில் வக்ர பயணத்தில் இருந்து வருகிறார்.

வரும் டிசம்பர் 31ம் தேதி என்று வக்ர நிவர்த்தி அடைகிறார். செல்வம், செழிப்பு, குடும்பம், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக இவர் விளங்கி வருகிறார். குரு பகவான் ஒரு அரசியல் சஞ்சாரம் செய்தால் அவர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு மே மாதம் தனது இடத்தை குரு பகவான் மாற்ற உள்ளார். இது சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

குரு பகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடன் சிக்கல்கள் குறையும் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கலாம். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த புத்தாண்டு உங்களுக்கு பல்வேறு விதமான சுப வாய்ப்புகளை உருவாக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

குருபகவான் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை கொடுக்கப் போகின்றார். புதிய வேலை வாய்ப்பு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. சுப செலவுகள் குடும்பத்தில் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கன்னி ராசி

குரு பகவான் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகின்றார். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். செல்வத்தின் சேர்க்கை அதிகமாகும். வெளிநாடு செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்ப ராசி

குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். குடும்பத்தில் இருந்த சிக்கலான சூழ்நிலைகள் நிவர்த்தி அடையும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசுவதை கட்டுப்படுத்துவது நல்லது. வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல சூழ்நிலை உண்டாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *